Saturday, July 6, 2019

தோணி






கில்கிறிஸ்ட், சங்கக்காரா  போன்ற பல முன்னணி கிரிக்கெட் வீரர்கள், விக்கெட் கீப்பிங் மற்றும் பேட்டிங் இரண்டுமே பிரமாதமாக விளையாடுகிறபோது, நம் இந்திய அணிக்கு அதுபோல் ஒருவர் இல்லையே என்று நினைத்து கொண்டு இருந்த போது தான் வந்தார் மகேந்திர சிங் தோணி !




சச்சின் அவுட் ஆனதும் டிவியை நிறுத்தியவர்களை , மேட்ச் இறுதி வரை தனது அதிரடி finishingயால் பார்க்க வைத்தார்  தோணி.




இந்திய ஒரு பலமான கிரிக்கெட் அணியாக இருந்தாலும், 1983 WCக்கு பிறகு நமக்கு உலகக் கோப்பை கைக்கு கிடைக்கவே இல்லை.  அப்படி இருந்தபோது, மூத்த வீரர்கள் இல்லாமல் தோணி தலைமையிலான இளைஞர் படை 2007 T20 WC க்கு சென்றார்கள்.

 பலரும்   சச்சின், கங்குலி போன்றவர்கள் இல்லாமல் வெற்றி வாய்ப்பு சாத்தியம் இல்லை என்று நினைத்த போது, தோணி அணி முதல் T20 உலகக் கோப்பையை வென்றது.



2003 WCஇல்  இறுதிவரை இந்தியா சென்று ஆஸ்திரேலியாவிடம் தோற்றது , 2007 WCஇல்  வங்காளதேசத்திடம் தோற்று முதல் சுற்றிலேயே வெளியேறிது . அந்த தோல்விகளின் வருத்தத்தில் இருந்த  இந்திய ரசிகர்களுக்கு இந்த வெற்றி பெரும்கொண்டாட்டம் ஆகி போனது . கிரிக்கெட்டை பார்க்காத ரசிகர்களும்,இந்த வெற்றியால் தோணியை ரசிக்க தொடங்கினார்கள்.

 பிறகு ஐபிஎல், 2011 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி என்று வரிசையாக தோணி தலைமையில் அணி பெற்ற வெற்றி, ஒரு மாஸ் கதாநாயகனாகவே இந்திய ரசிகர்கள் மத்தியில் தோணியை மாற்றியது.



இந்தியாவில் வந்த மற்ற Biopic படங்களின் வசூல் சாதனையை கூட தோணி Biopic  முறியடிக்கும் அளவுக்கு அவரின் பிம்பம் உருவானது.


இந்தியாவுக்கு எப்பவும் மறக்கமுடியாத  சிறந்த விக்கெட் கீப்பர், கேப்டன், Finisher தோணி தான் !


இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தல தோணி 

Wednesday, August 29, 2018

பேருந்தில் இடஒதுக்கீடு

  பேருந்தில்    இடஒதுக்கீடு 







அரசு பேருந்துகளில்  பெண்கள்  இருக்கைகள் , பொது  இருக்கைகள் என்று  இருக்கும் . சில சமயம் பேருந்தில் பொது இருக்கைகள் பயணிகளால் நிரப்பப்பட்டு, பெண் இருக்கைகள் காலியாக இருந்தாலும் ஆண்களால் பெண் இருக்கைகளில் (பெரும்பாலும் ) உட்காரமுடியாது .



அந்த நேரத்தில் சில ஆண்கள்  "பாருங்க!! நம்மால இடம் காலியாக இருந்தும் உட்காரமுடியல... ஆனா இவங்க மட்டும்  பொதுஇருக்கைலேயும் உட்காரலாம் , பெண்இருக்கைலேயும்  உட்காரலாம் . இப்பலாம் பெண்களுக்கு தான் அரசாங்கம் எல்லா சலுகையும் குடுக்குது . கல்வி, வேலைவாய்ப்பு என்று பெண்கள் எல்லா இடத்திலேயும்  ஆண்களை விட  வளர்ந்துட்டாங்க "  என்று புலம்பவதை கேட்கமுடியும்.  (முன்பு நானும் புலம்பியவன் தான் ).



ஆனால் சமூக யதார்த்தம் என்ன ????  ஒரு ஆண் எவ்வளவு கூட்டத்தில் நின்றாலும் , அவரை எந்த பெண்ணும் பாலியல் தொந்தரவு செய்யபோவதில்லை,  வேண்டும் என்று உரசவோ இடிக்கவோ போறதில்லை. (பெரும்பாலும்)

                                 


இதை எல்லாம் பேருந்தில் பயணிக்கும்  பெண்கள்  சில ஆண்களால்  அனுபவிக்கிறார்கள்.   சில ஆண்கள் செய்யும் தவறக்காக மற்ற ஆண்களும்  சட்ட  விதிகளை ஏற்க தான் வேண்டும்.


பெண்சிசுகொலை, வரதட்சணை கொடுமை, பாலியல் வன்புணர்வு இதை எல்லாம் பெண்கள் தான்  அனுபவிக்கிறார்கள்  . அதனால் தான் பெண்களுக்கு இடஒதுக்கீடு, கல்வி ஊக்கதொகை, பாதுகாப்பு சட்டங்கள்  etc .  


இதை பற்றி எல்லாம் தெரியாமல்  "All Indians are my brothers and sisters " என்று பள்ளியில் படித்ததை வைத்து  "எல்லாரும் சமம் தான்,  அது என்ன  அவங்களுக்கு மட்டும்  தனி சலுகை  " என்று அறியாமையில் பேசுவது அழகல்ல!!!



இதுபோல விளிம்பு நிலை சமூகங்களின் பாதுகாப்புக்காக தான் வன்கொடுமை தடுப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது . அதையே இன்று நீக்க முயற்சி செய்கிறார்கள் .




அது சலுகை அல்ல , அவர்களின் சமஉரிமை . எந்த காரணத்திற்காக பாதிக்கப்படுகிறார்களோ  அதை வைத்து தான்    அவர்களுக்கு  தீர்வும்  கொடுக்க முடியும்.


 தவறுகள் இருந்தால் சரிபடுத்த வேண்டுமே தவிர ,  அதை முழுவதுமாக நீக்கவது அறிவுடைமை ஆகாது!

"கையில் புண் இருக்கிறது என்பதற்காக கையையே வெட்டி விட முடியாது "

Wednesday, August 22, 2018

மதம் மாறுகிறதா கடவுளின் தேசம்???

மதம் மாறுகிறதா கடவுளின் தேசம்???

1924க்கு பிறகு கேரளாவில் தற்போது தான்  மோசமான வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் , மத்திய அரசிடம் தேசிய பேரிடராக அறிவிக்க கேரளா அரசு கோரிக்கை வைத்தது. தேசிய பேரிடர் என்று அறிவித்தால்  தேசிய பேரிடர் மேலாண்மை வாரியம் 
(NDRF ) உதவி கிடைக்கும் . ஆனால் மத்திய அரசு , இதை தேசிய பேரிடராக அறிவிக்க சட்டம் இல்லை என்று கைவிரித்து விட்டது . மத்திய அரசுக்கு தேசிய பேரிடராக அறிவிக்க மனம் இல்லை என்பதே நிதர்சனமான உண்மை. அதுக்கு காரணம் மத்தியில் ஆளும் கட்சியான பாஜக இந்தியாவிலேயே (வலுவாக ) இல்லாத மாநிலம் கேரளா .




தமிழ்நாடு, ஆந்திரா போன்ற பல மாநிலங்களின் நிதியுதவி 100கோடியை தொடும்போது தான், பாஜக ஆளும் மாநிலமான ஹரியானா அரசு நிதியுதவி அறிவித்தது. மத்திய அரசு 500 கோடி நிதி அறிவித்தது (ஏற்கனவே 100 கோடி அறிவித்தது ).


ஐக்கிய அரபு அமீரகம் (UAE) 700 கோடி நிவாரண நிதி தருவதாக அறிவித்துள்ளது . மதமாற்றத்திற்காக இந்திய அரசை விட அதிக நிதி தருகிறது என்று சிலர் பேச தொடங்கி உள்ளனர். அவர்களுக்காக ஒரு சின்ன தகவல்.



1947 சுதந்திரம் கிடைத்த நேரத்தில் இஸ்லாமியர்களுக்கு பாகிஸ்தான் போல இந்துக்களுக்கு  இந்தியாவை இந்துஸ்தானாக மாற்ற வேண்டும் என்று சிலர் சொன்னதை பொருட்படுத்தாமல் நேருவும் காந்தியும்  இந்தியாவை ஒரு மதச்சார்பின்மை (Secularism) நாடாக வடிவமைத்தனர். அது பிடிக்காத காரணத்தால் இன்றுவரை சங் பரிவாரங்கள் (RSS etc..) அவர்களுக்கு எதிராக பரப்புரை செய்கின்றனர்.


பாகிஸ்தான் என்ற நாடு முஸ்லிம்கள் போராடி பெற்ற நாடு.  இந்தியா என்பது இந்து, முஸ்லிம், சீக்கியம்  என அனைத்து மதத்தினரும் போராடி பெற்ற நாடு.


இந்தியா என்ற நாடு சுதந்திரம் பெற்றபோது பல நாடுகளாக பிரியும் என்று  உலக நாடுகள் நினைத்தன . ஆனால் 70 ஆண்டுகள்  கடந்தும் இந்தியா பிளவுபடாமல் இருப்பதற்கு காரணம் நாம் பின்பற்றும் மதச்சார்பின்மை கொள்கை மற்றும் அரசியல் அமைப்பு சட்டம்  (Constitution) .


மனிதநேயம், மத நல்லிணக்கம்  ஒருபுறம் என்றாலும், நம் சுய லாபமமும் இதில் இருக்கிறது. இந்தியா உட்பட உலகநாடுகள் அனைத்துமே தன்னுடைய வெளியுறவு கொள்கையை   சுய லாபத்திற்காக மட்டுமே  கட்டமைக்கும்.


அயல்நாட்டில் லேலை செய்யும் இந்தியர்கள் இந்தியாவிற்கு அனுப்பும் பணத்தில் (Remittance) அரபு நாடுகளின் பங்கு அதிகம் .



 தற்போது UAE உதவுவதற்கு  அதனுடைய சுயலாபம் கூட ஒரு காரணம் . ஏனென்றால் மலையாளிகள் பெரும்பாலும் UAE ல் அனைத்து வேலைகளிலும்  முன்னனியில் இருக்கின்றனர். அவர்களுக்கும் மலையாளிகள் தேவை.


வரலாற்று மற்றும் கலாச்சார காரணங்களால் இந்தியாவில் இருந்து பெரும்பாலும்  பஞ்சாபியர்கள் கனடாவிற்கும்,  தமிழர்கள் தெற்காசிய நாடுகளுக்கும்,  தெலுங்கர்கள் அமெரிக்காவிற்கும் செல்வார்கள். (Now Tamilans are also going to US)
அதுபோல மலையாளிகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு (Middle East) செல்வார்கள்.



பல மொழிகள், மதங்கள் கொண்ட மதச்சார்பின்மை நாடாக தான் இந்தியாவை உலகநாடுகள்  பார்க்கின்றன. அதனால் என்ன நன்மை என்று சிலர் நினைக்கலாம்.  உலகில் கிருத்துவ, முஸ்லிம் மதத்தை பின்பற்றும் நாடுகள் தான் அதிகம். உலகில் இந்தோனேஷியா, பாகிஸ்தானுக்கு பிறகு இந்தியாவில் தான் முஸ்லிம்கள் அதிகமாக இருக்கிறார்கள்.
(IndiaNepal, and Mauritius are the three Hindu majority countries in the world.)



இந்தியா அதிகமாக இறக்குமதி (Import) செய்யும் எண்ணெய் மற்றும் எரிவாயுக்களுக்காக முஸ்லிம் நாடுகளை தான் நம்பி இருக்கிறது .


மதத்தை முன்னிறுத்தி மாட்டிறைச்சியை எதிர்ப்பவர்கள் தான் அதிகளவில் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்யும் கிருத்துவ நாடான அமெரிக்காவிற்கு படிக்கவும், வேலை பார்க்கவும் செல்கின்றனர். ஆனால் அவர்கள் தான் இந்தியா இந்துக்களுக்கு மட்டுமே என்ற கோஷம் போடுகிறார்கள் .யாரையும் இந்த மண்ணை விட்ட போக சொல்ல தார்மீக உரிமை எவருக்கும் இல்லை .


எங்களுக்கு இந்துக்கள் மட்டும் உள்ள நாடு தான் வேண்டும் என்று நினைப்பவர்கள் . இந்தியாவுக்கு அருகில் உள்ள  இந்துக்கள் பெரும்பான்மையாக வசிக்கும் நேபாளத்துக்கு செல்லலாம் . விசா, பாஸ்போர்ட் கூட தேவை இல்லை. இந்திய மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் கூட சேரலாம்.


பல்வேறு மதம்,மொழி,இனம்,நிறம் என்று இருந்தாலும் "வேற்றுமையில் ஒற்றமை " என்னும் மனப்பாங்கு இருப்பதால் தான் மிகப்பெரிய மக்களாட்சி நாடாக இந்தியா திகழ்கிறது என்பதே மறுக்கமுடியாத உண்மை !












Sunday, August 19, 2018

கடைக்குட்டி சிங்கம்

கடைக்குட்டி சிங்கம்


படம் ,ஆண் குழந்தை வேண்டும் என்ற காரணத்திற்காக இரண்டு திருமணம் செய்து கொள்வது , நிறைய குழந்தைகள் பெற்று கொள்வது  என்று பிற்போக்கு தனமாக தொடங்கிறது. பிறகு கோலிவுட் வழக்கப்படி ஹீரோ  ஓப்பனிங் , பார்த்ததும் காதல் ஆரம்பம் ஆகிறது.



சாதியை வைத்து கட்டப்பஞ்சாயத்து மற்றும் கொலை செய்வதாக காட்டும் வில்லனுக்கு  "கொடியரசு "  என்று பெயர் வைத்து கார்த்தியை கதாநாயகனாக வைத்தே தோலுரித்து காட்டியது துணிச்சலான விஷயம் பாண்டிராஜ் .




சாதியை வைத்து அரசியல் செய்வதை திட்டும் பஞ்ச் வசனத்தில், குறிப்பாக   'சாதியை வைத்து வியாபாரம் பண்றவங்க'  என்று சொல்றப்ப கோயில் அர்ச்சகர்களை காட்டுவது மிகச்சிறப்பு .



மாற்று சாதி பையன் தன் சாதி பெண்ணிடம் பேசியதை பார்த்து மிரட்டுவது, பதிலுக்கு அவன் எதிர்த்து பேசியதால் கொலை செய்வது நாமக்கலில் கொலைச் செய்யப்பட்ட கோகுல்ராஜை ஞாபகப்படுத்தியது.



கார்த்தி-சயிஷா  காதலால், கார்த்தி குடும்பத்திற்குள் பிரச்சினை வரும்போது , பிரியா பவானி சங்கர் இனிமே " சின்ன வயசுலே இவளுக்கு இவன் தான்,மாமாவை   கட்டிக்கோ" என்று சொல்லி வளர்க்காதீங்க என்று கோவமாக சொன்னாலும் தற்போதைய சமூகத்துக்கு தேவையான ஒன்று



ஆணவக்கொலை செய்தது தன் சாதி ஆள் என்றாலும் ,எதிர்த்து நீதிமன்றம் செல்வது , பிறகு சண்டை போடுவது போன்ற காட்சிகள் 'தன் சாதி என்பதற்காக கொலைக்காரனை கூட " மாவீரனாக",  " கட்டப்பா மாமா " போல ஒரு இனக்காவலராக நினைக்கும் இளைஞர்களுக்கு கொஞ்சம் யோசிக்காவது வைக்கும்"



கடைசியில் குடும்பம் இணைந்து, கார்த்தி-சயிஷா காதலுக்கு சம்மதிப்பது எல்லாம் செம ! ஆனால் எமோஷனல் தூக்கலாவே போட்டு இருக்கிறார் பாண்டிராஜ்


பிரியா பவானி சங்கரை மெயின் ஹீரோயினாக காட்டி இருந்தால் கிராமத்து கதைக்கு இன்னும் பொருத்தமாக இருந்து இருக்கும். இமான் இசையில் ஒரு பாட்டு கூட சரி இல்லை. கார்த்தியின் கதைத் தேர்வு தொடர்ந்து சிறப்பாக இருக்கிறது .


கிளைமாக்ஸில் கார்த்தி "இரண்டு பொண்டாட்டி கட்டுவது எல்லாம் இங்க சகஜம் தானே"  என்பதை கொஞ்சம்  எதிர்ப்பது போல வசனம் வைத்து காட்டி இருக்கலாம்.சூரியின் காமெடி ரொம்ப நாள் கழித்து சிரிக்க வைக்கிறது.


மொத்தத்தில் காமெடி, செண்டிமெண்ட், ஆக்சன் என கமர்ஷியல் கதையில் சமூகத்துக்கு தேவையான ஒரு சில நல்ல விஷயங்களையும் சேர்த்து ஒரு பக்கா  எண்டர்டெயினர் கொடுத்து இருக்கிறார்.



 'தமிழனாக இருந்தால் ஷேர் பண்ணு',  ' இதே நடிகர் படமாக இருந்தால் லைக் வந்து இருக்கும் ' தொணியில் கார்த்தியை விவசாயி ஆக கட்டமைக்காமல்,  IT போன்ற மாற்றுதுறையில் இருந்து விவசாயத்துக்கு வந்து அதை லாபகரமான தொழிலாக கொண்டு போகிறவர்கள் போல காட்டி இருந்தால் இளைஞர்களுக்கு ஒரு ஊக்கமாக இருந்து இருக்கும்.



புத்தக வாசிப்பு, உரையாடல், திரைப்படங்கள் மூலம் தான்  சமூகத்தில் உள்ள  பிற்போக்கு தனத்தை உடைக்க முடியும்.அதனால் இதுப்போல விமர்சனமும் தேவை என்று நினைக்கிறேன் .

Tuesday, August 14, 2018

சுதந்திர தின வாழ்த்துக்கள்

       சுதந்திர தின வாழ்த்துக்கள் 



நேரு,காந்திநேதாஜி பற்றி தவறான கதை திட்டமிட்டு பரப்படுகிறது.அதற்கு ஒரு சிறிய விளக்கம்.

*பிரிட்டிஷ் ராணுவ படையில் இருந்த இந்திய வீரர்கள் பலர் ஜப்பானிடம் கைது ஆகி இருந்தனர் .(They are called Prisoners of War).

*ஜப்பான் உதவியோடு சிறையில் இருந்த இந்திய வீரர்களை சேர்த்து INA(Indian National Army) சிங்கப்பூரில் நேதாஜியால் தொடங்கப்பட்டது.
இரண்டாம் உலக போரில் ஜப்பான் வீழ்ந்ததால் ,INAவும் சரண் அடைந்தது.(INA Trial ).
இதில் நேதாஜி பிரதமர் ஆவதை எங்கே நேருவும், காந்தியும் தடுத்தனர்?

* ரஷ்யா மற்றும் அமெரிக்கா அணியில் சேராத உலக நாடுகளின் தலைவராக நேரு போற்றப்பட்டவர்(One of the Architects who founded Non-Align Movement).

*காந்தியும், நேருவும் நினைத்து இருந்தால் பாகிஸ்தான் போல , இந்தியாவும் ஒரு இந்து நாடாக உருவாக்கி இருக்கமுடியும்.
ஆனால் நேரு பொதுவுடைமை (Socialism) சித்தாந்தை பின்பற்றியதால் அதைத் தவிர்த்தார்.

அப்புறம் அவர்களை எதிர்ப்பதால் யாருக்கு என்ன லாபம்?

* நேதாஜி மேற்கு வங்காளத்திலும் மற்றும் தென்தமிழகத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்திலும் செல்வாக்கு பெற்றவர்.அவர்கள் ஓட்டு நேதாஜியை ஆதிர்ப்பவர்களுக்கு கிடைக்கும்.

* காந்தி இந்து மதத்தில் இருந்தே சாதி கொடுமைகளை ஒழிக்க நினைத்தார்.அதனால் முஸ்லிம்கள் போல,அம்பெத்கர் கோரிக்கைப்படி தலித்துகளுக்கு Separate Electorate கொடுத்தால் பிரிவினை உருவாகும் என்று ஏர்வாடா ,(புனே) சிறையில் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்தார்.கடைசியில் அம்பெத்கர் காந்தி முடிவை ஏற்று,அதற்கு பதிலாக தனி தொகுதிகளை (Reserved Constituency) பெற்றுக்கொண்டார்.(Poona Pact).இந்த காரணத்தால் பெரும்பாலான தலித்துகளுக்கு காந்தி பிடிக்காது.

அதனால் ஒரு பக்கம் காந்தியை
முன்னிறுத்தி Swach Bharat Campaign நடத்திக் கொண்டே,காந்தியை கொன்ற கோட்சேவுக்கும் சிலை வைப்பவர்களுக்கு மட்டுமே பலன்.

இந்திய சுதந்திரத்துக்கு நேரு,காந்தி நேதாஜி ,அம்பெத்கர் மற்றும் அனைத்து மதத்தினரும் பங்காற்றி இருக்கிறார்கள்.அவர்கள் இந்தியா ஒரு மதச்சார்பின்மை நாடாக மாறத் தான் ஆசைப்பட்டனர்.
இன்று பிறரை "ஆண்டி இந்தியன்" என்று சொன்னவர்கள் சுதந்திர போராட்டத்துக்கு எதுவுமே செய்யாதவர்கள்.

"We are Indians,firstly and Lastly"❤️
- Dr B.R.AMBEDKAR


#HappyIndependenceDay

புலியும் சிங்க(ள)மும்!

             புலியும் சிங்க(ள)மும்!



ஒரு சிறிய நாட்டுக்கு அருகில் இரண்டு பெரிய நாடுகள் இருந்தால்,யார் அந்த சிறிய நாட்டைக் கட்டுக்குள் வைத்திருப்பது என்று ஒரு போட்டியே நடக்கும். இது தான் உலக நியதி. இதில் இந்தியாவும், சீனாவும் விதிவிலக்கு அல்ல. இந்த சூழல் காலத்துக்கு ஏற்ப மாறி வருகிறது.

இலங்கை தமிழர்கள்(including Srilankan Tamil Muslims) பற்றி இரண்டு விதமாக சொல்கிறார்கள்        1.இலங்கையின் பூர்வீக மக்கள்
2.தமிழகத்தில் இருந்து  சோழ அரசுக்கு முன் இடம்பெயர்ந்தவர்கள்.


இலங்கையில் 1796 முதல் ஒவ்வொரு இடமாக பிரிட்டிஷ் கைப்பற்ற துவங்கியது. 1815ல் முழுவதுமாக இலங்கை பிரிட்டிஷ் வசம் வீழ்ந்தது.
இலங்கையில் தேயிலைத்  தோட்டங்களை உருவாக்குவதற்காக   கொத்தடிமைக் கூலிகளாக (Bonded Labour) இந்தியாவில் இருந்து தமிழர்கள் அழைத்து செல்லப்பட்டனர். இவர்களை மலையக தமிழர்கள் அல்லது இந்திய தமிழர்கள் என்று கூறுவார்கள். இதைப்  போல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் ஆளப்பட்டப்  பல்வேறு உலக நாடுகளுக்கு அழைத்துச்  செல்லப்பட்டனர்.

இதை குறிப்பிட்டுத்தான் கபாலி கிளைமாக்ஸில் கூட வில்லன் டோனி லீ கபாலியை பார்த்து Kling (அடிமை அல்லது தெற்காசிய நாடுகளில் இருந்து வந்தவர் ) Dog என்று கூறுவார்.

1948, இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி மலையக தமிழர்கள் தாயகம் திரும்பினர். சிலர் அங்கேயே தங்கிவிட்டனர். 1956ல் பண்டாரநாயக்கா இலங்கை பிரதமர் ஆனார். அதன்பிறகே சிங்கள தேசியவாதம் வளர்க்கப்பட்டது . 1958 இலங்கை முழுவதும் தமிழ் மக்களுக்கு எதிராக கலவரம் தொடங்கியது. சுமார் 300 பேர் இறந்தார்கள்.தமிழர் பகுதியில்(வடக்கு & கிழக்கு மாகாணங்கள்) சிங்களர்கள் மீதும் பதில் தாக்குதல் நடத்தப்பட்டது


1972, சிலோன் என்ற பெயர்  இலங்கை ஆனது. பின்னர் புத்த மதத்துக்கு மட்டும் சிறப்பு உரிமை வழங்கப்பட்டது.1976-1983 தமிழ் மக்களுக்கு எதிராக திரும்பவும் இனக்கலவரம் நடந்தது.
1976இல் விடுதலைப் புலிகள்
 (LTTE-

Liberation Tigers of Tamil Eelamவேலுப்பிள்ளை பிரபாகரனால் 

உருவாக்கப்பட்டது.


1981, யாழ்பாணத்தில்
(Jaffna) " யாழ் பொது நூலகம் " இருந்தது. அந்த நூலகத்தில் தமிழர் வரலாறு பற்றிய தகவல்கள்  இருந்தது. அது சிங்களக் குழுக்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது என்று கூறப்படுகிறது.

இன அழிப்பு (Ethnical cleansing) செய்ய நினைப்பவர்கள் முதலில் வரலாற்றை தான் அழிப்பார்கள்.

இதைக் கேட்கும்போது  அம்பேத்கர் சொன்ன தத்துவம் ஒன்று தான் ஞாபகத்துக்கு வருகிறது .

"They cannot make history who forget history”.-B.R.Ambedkar

1983, முதலாம் ஈழப்போர்(1983-1987)
தொடங்கியது. 1987 இலங்கை ராணுவம் விடுதலைப்புலிகள் விரிவாக்கத்தைத் தடுத்து யாழ்பாணத்துக்குள்ளே (இலங்கையின் வடக்கு பகுதி) மட்டும் சுருக்கினர். ஆனாலும்  இந்திரா காந்தி அரசின் ஆயதம் மற்றும் பண உதவி இருந்ததால் விடுதலைப்புலிகள் வலுவாகப்  போரிட்டது. விடுதலைப்புலிகளை வளர்த்துவிட்டதே RAW (Research and Analysis Wing- இந்திய உளவுத்துறை)  என்றும் செய்தி உலவுகிறது.

இந்திரா காந்தி பாணியையே ராஜீவ்காந்தியும் முதலில் பின்பற்றினார்.
இலங்கை அரசின் கோரிக்கையையும் பொருட்படுத்தாமல் பாதிக்கப்பட்டத்  தமிழர் பகுதிகளில் மருந்து மற்றும் உணவு பொட்டலங்களை இந்திய விமானப்படை மூலம் ராஜீவ்காந்தி போடச் சொன்னார். இது இலங்கைக்கு இந்தியா மீது ஒரு அச்சத்தை உருவாக்கியது.


29 ஜூலை 1987ல் இந்தியா- இலங்கை (  ராஜீவ்காந்தி vs ஜெயவர்த்தனே) ஒப்பந்தம் போடப்பட்டது.
அதன் பிரிவுகள்:

1. இலங்கை அரசு தமிழர் பகுதிகளுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க வேண்டும்

2. இலங்கை ராணுவம் தமிழர் பகுதிகளில் இருந்து வெளியேற வேண்டும்

3. விடுதலைப்புலிகள் தங்களுடைய ஆயுதங்களை ஒப்படைக்க  வேண்டும்

ஒப்பந்தத்தின் தவறுகள் :

விடுதலைப்புலிகள் ஒப்பந்தத்தில் சேர்த்துக் கொள்ளப்படாதது. அவர்கள் ஆயுதங்களை  வலுக்கட்டாயமாக ஒப்படைக்க செய்தது.


இலங்கைக் கப்பல் படையிடம் பிடிப்பட்ட விடுதலைப்புலித் தளபதிகள் Cyanide சாப்பிட்டு இறந்தார்கள். இது LTTEல் சலசலப்பு ஏற்படுத்தியது.


மறுபடியும் LTTE ஆயுதங்களை கையில் எடுத்தது. அதனால்
ராஜீவ் காந்தி இந்திய அமைதிப்படையை (IPKF) இலங்கைக்கு அனுப்பினார். ஆனால் இதுவரை இலங்கை அரசு இலங்கையின் உள்நாட்டு விவகாரத்தில் இந்தியாவின் தலையீட்டைத் தவிர்க்க முடியாமல் இருந்தது. இதை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளுக்கு  மறைமுகமாக பணம் கொடுத்து இந்தியாவுக்கு எதிராக சண்டையிட சொன்னதாகக் கூறப்படுகிறது.


இந்தியா அமைதிப்படையை இலங்கைக்கு அனுப்பியது ஒரு தவறான முடிவாகப் பார்க்கப்பட்டது.அவர்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு எதிராகவே அட்டூழியம் செய்ததாகக் கூறப்படுகிறது. இந்தியா அமைதிப்படையை சரியான முன்னேற்பாடுகள் எதுவும் இல்லாமல்  அனுப்பியதால் , இந்திய அமைதிப்படைக்கு LTTEயால் மிகுந்த பின்னடைவு ஏற்பட்டது.


அன்றையத் தமிழக முதல்வர் கருணாநிதி ஈழப் பிரச்சினையை மேற்கோள்காட்டி, நம் இந்திய அமைதிப்படையை வரவேற்காததால், வடஇந்திய ஊடகங்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டார்.


பிறகு இரண்டாம் ஈழப் போர் (1990-1995)தொடங்கியது. JVP(மக்கள் விடுதலை முன்னணிஎன்ற சிங்கள கட்சி இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தை (1987) கடுமையாக எதிர்த்தது . 1990களில் உட்பூசல் காரணமாக வடக்கு மாகாணத்தில் இருந்த இலங்கை தமிழ் முஸ்லிம்கள் விடுதலைப்புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.
1991ல் விடுதலைப்புலிகளால் ராஜீவ்காந்தி தமிழகத்திலே  படுக்கொலை செய்யப்பட்டார். 1993ல் இலங்கை பிரதமர் பிரமேதாசா  விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்டார்.


1994ல் சந்திரிகா குமாரதுங்க இலங்கை பிரதமர் ஆனார். முதலில் விடுதலைப்புலிகளுடன் அமைதிப் பேச்சுவார்த்தையை தொடங்கினார். பிறகு 1995ல் மூன்றாம் ஈழப் போர்(1995-2002) துவங்கியது .


2002ல் சர்வதேச மத்தியஸ்துடன் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது (Norway as mediator between Srilankan Govt and LTTE ).

1. இலங்கை அரசு விடுதலைப்புலிகள் மீது இருந்த தடையை நீக்க வேண்டும்.
2. விடுதலைப்புலிகள் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும்.

ஆனால் 2003ல் பேச்சுவார்த்தையில் இருந்து விடுதலைப்புலிகள் விலகியது. போர் நிறுத்தம் மட்டும் நீடித்தது. 2004 கிழக்கு மாகாண விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கருணா மற்றும் 5000 விடுதலைப்புலிகள்  இலங்கை அரசிடம் சரணடைந்தனர். பின்னர் கருணா இலங்கை MP ஆக தேர்ந்து எடுக்கப்பட்டார்.


2005, இலங்கை தேர்தலை இலங்கை தமிழர்கள்  புறக்கணிக்க வேண்டும் என்று விடுதலைப்புலிகள் சொன்னார்கள். அது கடைசியில் ராஜபக்சேக்கு சாதமாக முடிந்து பிரதமர் ஆனார். அவர் ஒரு சீனா ஆதரவு பிரதமர். அதனால் இலங்கைக்கு சீனா பல உதவிகளை செய்தது. இலங்கை அரசும் பதிலுக்கு நன்றியை காட்டியது. குறிப்பாக சில துறைமுகங்களை குத்தகைக்கு தந்தது.
(Eg. Hambantota Port)


2006இல் நான்காம் ஈழப் போர்(2006-2009) தொடங்கியது . 2009 மே விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டார். விடுதலைப்புலிகளும் வீழ்ந்தார்கள். ஈழ போரும் முடிந்தது.

உலக நாடுகளின் அழுத்தத்தால் "கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு" (LLRC) இலங்கையில் அமைக்கப்பட்டது. இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகளின் விதிமீறல்களை LLRC பதிவு செய்தது.


2011ல் ஐநா சபை இருதரப்பினரும் குற்றம் இழைத்ததாகக் கூறியது. பொது விசாரணை தேவை என்று சொன்னது. ஆனால் இலங்கை அரசு "ஐநா அறிக்கை ஒரு பக்கம் சார்ந்து உள்ளது " என்று விமர்சித்தது.


2011-12ல் மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் மன்றத்தில் (UNHRC) இலங்கை அரசின் போர் குற்றங்களை விசாரிக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்திய பெருங்கடலில் சீன ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக இலங்கை அரசுக்கு ஆதரவாகவே இந்தியா வாக்களித்தது.


2015ல் மைத்திரிபால சிறிசேன இலங்கை பிரதமர் ஆனார். அவர்  தமிழர்களுக்கு அவசர மறுசீரமைப்பு செய்ய "Special Presidential Task Force " என்ற அமைப்பை உருவாக்கினார். முறையான விசாரணை நடத்தவும் முயற்சி செய்தார்.


விடுதலைப்புலிகள் வீழ்ந்ததுக்கு சில காரணங்கள்:

1.இலங்கையில் இலங்கை தமிழர்கள் ஒரு சிறுபான்மைச் சமூகம் (11%) . வடக்கு & கிழக்கு மாகாணத்தில் மட்டும் பெரும்பான்மையாக இருந்தார்கள். விடுதலைப்புலிகளால் தமிழ் முஸ்லிம்களும் வடக்கு மாகாணத்தில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.
கிழக்கு மாகாணத்தின் விடுதலைப்புலிகள் தலைவர்களில் ஒருவரான கருணா பிரிந்து சென்றது பெரும் பின்னடைவானது.

2.மலையக தமிழர்கள் (Indian Tamils 4%.They are the only Indian Diaspora in Srilanka) பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தபோதும் ,
விடுதலைப்புலிகள் அவர்கள் ஆதரவை பெற தவறிவிட்டனர் .
இங்கு உள்ள ஈழ ஆதரவாளர்களும் மலையக தமிழர்களுக்கு பெரும்பாலும் உதவி செய்வது இல்லை.

3.ஆப்கானிஸ்தானில் தலிபான்கள்  ஆட்சி செய்தார்கள், அரபு நாடுகளில் பல போராளி குழுக்கள் தனி நாடு பெற்றது. பிடல் காஸ்ட்ரோ அமெரிக்காவையே எதிர்த்து கியூபாவை கட்டமைத்தார். ஆனால் இந்த நாடுகள் ரஷ்யா அல்லது அமெரிக்காவின் ஆதரவைப் பெற்றது.

ஆனால் ராஜீவ்காந்தி படுக்கொலைக்கு பிறகு பக்கத்து நாடான இந்தியாவின் ஆதரவைக் கூட விடுதலைப்புலிகள்  இழந்தது .
உலக நாடுகள் ஆதரவு இல்லாத ஆயுதம் ஏந்திய எந்த போராளிக் குழுக்களுக்கும் தனி நாடு கிடைக்க எந்த நாடும் ஆதரவு தராது.

அதே சமயம் இந்திரா காந்தி இன்னும் கொஞ்சம் காலம் உயிரோடு இருந்து இருந்தால், பாகிஸ்தானில் இருந்த "கிழக்கு பாகிஸ்தான் மாகாணம்"  வங்காளதேசமாக  உருவானது போல தமிழர் பெரும்பான்மை பகுதி ஈழம் என்ற தனி நாடாக உருவாகி இருக்கக்கூடும் என்ற பேச்சும் அடிபட்டுக்கொண்டுதான் இருக்கிறது .
India along with rebel Mukti Bahini won war with Pakistan; and Pak General Niazi with his 93,000 surrendered unconditionally in 1971. Bangladesh was formed




வரலாறு, " புலிகளும், சிங்கங்களும் ஒரே காட்டில் வாழ முடியாது "  என்பதை திரும்பத்திரும்ப நிரூபித்துக் கொண்டே இருக்கிறது !